சென்னை : பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, அது அரசின் கொள்கை முடிவு  என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 வழங்கக் கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை  பொங்கலுக்கு முன்பு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்தார். ஆனால்,  விசாரணைக்கு எடுக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்,லட்சுமிநாராயணன் அமர்வு மறுத்து விட்டனர். இந்த நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்குவதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க கோரிய முறையீட்டில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.