குற்றாலம்

னமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுளது.

கடந்த ஓரிரு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைப் போல் செங்கோட்டைக்கு அருகே கேரள எல்லையில் உள்ள பாலருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.