சென்னை: மொபைல் ஆப் மூலம் இணையதள மோசடியில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட சைபர் குற்றவாளி கும்பலை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன், சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன், சென்னை-ஆவடியை சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத் மற்றும் மதுரை- பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன்  ஆகிய சைபர் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றனர். பெரும்பாலான  மோசடிகள் சமூக இணையதளங்கள், வாட்ஸ்அப் போன்றவைகளின் மூலமாகவே நடைபெற்ற வருகின்றனர்.  இந்த நிலையில்,  வாட்ஸ்அப் மற்றும் இணைதயளம் மூலம் ஏமாற்றி 14 கோடி பணம் மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை  தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது.

முன்னதாக,  ஒரு கும்பால், Black Rock Asset Management Business School  என்ற நிறுவனம் வைத்துள்ளதாக, WhatsApp மூலம் குழு தொடங்கி ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை ஏமாற்றி வந்ததுள்ளது. இதற்காக சில பிரத்யேக செயலி (App) உருவாக்கி அதில் பலரும் அதிக லாபம் பெற்றதுபோல போலியான செய்தி பரிமாற்றங்கள் செய்து. தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மாதத்தில் 500% லாபம் பெற்று தருவதாக  பொது மக்களை நம்ப வைத்து  பணம் பறித்து வந்துள்ளனர்.

இதை நம்பி  பலர் பணம் முதலீடு செய்துள்ளனர். இதன்மூலம் அந்த கும்பல்,  ரூபாய் 14 கோடி வரை ஏமாற்றி உள்ளனர்.  பின்னர் திடீரென அந்த நிறுவனம் குறித்த தகவல் வராத நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த பலர்  National Cyber Crime Reporting Portal-ல் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கம் செய்தனர். தொடர்ந்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இதில், முதல்கட்டமாக,  செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சிக்கினார். அவரை கைது செய்து விசாரித்த நிலையில், பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அவர் கொடுத்த தவலின்அடிப்படையில், தலைமறைவாக இருந்த சைபர் குற்றவாளிகள் ஒவ்வோருவராக கைது செய்யப்பட்டனர்.

அதன்படி,  சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன், திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன், சென்னை-ஆவடியை சேர்ந்த சதீஷ்சிங், புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத் மற்றும் மதுரை- பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய  6 பேர் கொண்ட  கும்பல் இந்த சைபர் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.  அவர்களிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட  பல செல்போன்கள், லேப்டாக்கள் உள்பட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த சைபர் குற்ற செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும் மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி,  சைபர் கிரைம் போலீசார் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.

பொதுமக்கள் இது போன்ற கவர்ச்சிகரமான தகவல்களை நம்பவேண்டாம். இதுபோன்ற மோசடிகளை அடையாளம் கண்டு கணினிசார் குற்றப் பிரிவு அல்லது காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அருகிலுள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அதிகபடியான லாபம் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்தால் அதில் [மோசடிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது- விழிப்புடன் இருக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.
மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

உங்கள் வங்கி மற்றும் கடன் அட்டை (Credit Card) கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.
முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள்இதுபோன்றமோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர்கிரைம்கட்டணமில்லாஉதவிஎண்1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளது.