சென்னை

யில்வே காவல்துறையினர் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இன்னும் 10 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது தீபாவளியை முன்னிட்டு பலரும் ரயில்களில் பயணம் செய்ய உள்ளனர்.  இந்த பயணத்தின் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.

மேலும் இதை மீறுபவர்கள் ரயில்வே சட்டப்பரிவின் கீழ் கைது செய்து அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே காவல்துறை,

”ரயில் பயணத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது”

என எச்சரித்துள்ளது.