சேலம்

சேலம் அருகே உள்ள ஏரியில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்த்ல் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டையில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் சென்றுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அப்பகுதியை சேர்தவர்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல்துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஏரியில் மூழ்க உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.