சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், நிதி விடுவிக்க வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக  வரும் 21 ந்தேதி அமெரிக்கா பயணமாகிறார். அங்கு 21,  22, 23 ஆகிய 3 நாட்கள் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

இதற்க முன்பு முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கோரப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி, மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.