ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில்  இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.   காலை 9மணி வரை 11.11% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது

இன்று வாக்குப்பதிவு நடைபெறும்   முக்கிய தொகுதிகளான அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 8மணி முதல் விறுவிறுப்பாக  நடைபெறுகிறது. சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முதற்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்ற னர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை முதலே வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி 11.11 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.