சென்னை

காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் பிரபல சென்னை ரவுடி காக்காத்தோப்பு ரவி சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினர் குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை தீவிரமாக தேடி வந்தனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு இன்று கிடைத்த தகவலின்படி விரைந்து சென்உ காக்காதோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்துள்ளனர். பாலாஜி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

காவல்துறையினர் காக்காதோப்பு பாலாஜி மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்தார். என்கவுண்டரில் உயிரிழந்த காக்காதோப்பு பாலாஜியின் உடல் பிரேதபரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது சென்னை மாநகராட்சி கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் ஆகும். ஏற்கனவே இதற்குமுன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.