திருநெல்வேலி

நாடெங்கும் மதுவிலக்கு கொண்டு வந்தால் அதற்க் தமிழகம் தடையாக இருக்காது என சபாநாயக்ர் அப்பாவு கூறியுள்ளார்.

இன்று , நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள் 4-வது மண்டல பேரிடர் மீட்பு படை மைய திறப்பு விழா நடைபெற்றது.

தமிழக சபாநாயகர் அப்பாவு இதனை திறந்து வைத்து உபகரணங்களை பார்வையிட்டார். பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

அப்பாவு செய்தியாலர்களிடம், ,

“மது ஒழிப்பு என்பது ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கலாம். அந்த வகையில், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதில் எந்த தவறும் இல்லை.

இந்திய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

அவ்வாறு இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது”

என்று கூறியுள்ளார்.