சென்னை

நாளை கிண்டி சிறுவர் பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். இந்த புங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன. இது சென்னை, புறநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

இதைப் போல் சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணையும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பொழுது போக்கு இடமாக அமைந்துள்ளது.   நாளை சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் சிறுவர் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் , ஆனால் நாளை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.