சென்னை

ன்று சென்னை சென்டிரல் – திருத்தணி மின்சார ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் அரக்கோணம் – திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள் திருத்தணி – அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

என்று கூறப்பட்டுள்ளது.