சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள். தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைசட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்த்ல் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே சாட்சிகள் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி விட்ட காரணத்தினால் மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார். நீதிபதிக கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.