சென்னை

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்ரத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவர் காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது நீதிமன்றக் காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனால் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.