சென்னை’
தமிழகத்தில் உள்ள 25 அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாற்ற ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில்,
”தமிழகத்தில் உள்ள 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற 5.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பள்ளிக்கு ரூ.20 லட்சம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியில், சூரிய சக்தி மோட்டார் பம்புகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மக்கும் உரம், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் உருவாக்கம், கழிவு நீர் மறுசுழற்ச்சி ஆகியவை மேற்கொள்ளப்படும் ?
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel