சென்னை

மிழக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது குறித்து வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ளார். சேகர் மற்றும் செல்வராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதையொட்டி தலைமறைவாக இருந்த சேகர் மற்றும்  செல்வராஜ் ஆகிய இருவரை சிபிசிஐ காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.