தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ஷிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவராக மாற்றப்பட்டதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்தவரான என். முருகானந்தம், 1991-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தோ்ச்சி பெற்றார்.

பொறியியல் பட்டம் பெற்ற இவர் முதுநிலை கணினி அறிவியல் மற்றும் ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படித்துள்ளார்.

கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறையின் இணைச் செயலா், தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையா், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளா் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா்.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ள இவர் நிதித் துறை செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.