சென்னை: சென்னை சூளை பகுதியில் அமைந்துள்ள யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம் உள்பட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைத்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அதைத் தொடர்ந்து,  68 புதிய வாகனங்களை  கொடியசைத்து தொடங்கி வைத்துடன்,  144 பேருக்கு பணிநியமன ஆணைகள் ம, 27 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (ம) சென்னை மாநகராட்சி சார்ந்த பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட திட்ட பணிகள், முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து,  ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்படி,  யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம், பெசன்ட்நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நடைபாதை,  மெரினா லூப் சாலை கடற்கரை பகுதியில் நவீன மீன் அங்காடி, புதிய பூங்காக்கள், புதிய விளையாட்டு மைதானங்கள், புதிய பஸ் நிலையங்கள், சுரங்கப்பாதை, புதிய பாலங்கள், ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், ஆகாய நடைபாதை, ஏரி மற்றும் கால்வாய் சீரமைப்பு, தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், புதிய அலுவலக கட்டிடங்கள், அறிவுசார் மையங்கள், பொது கழிப்பிடங்கள், புதிய குடிநீர் திட்டப்பணிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட 104 முடிவுற்ற திட்டப்பணிகள்  தொடங்கி வைக்கப்பட்டு மக்கள் செயல்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. 

இது தவிர ரூ.1192.45 கோடி மதிப்பீலான 30 புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் 144 பேருக்கு பணிநியமன ஆணைகள் மற்றும் 27 பேருக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை வழங்கி 68 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.