சென்னை

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா இன்று மரணம் அடைந்துள்ளார்.  அவரது மறைவுக்கு நாடெங்கும் உள்ள பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,

“இடதுசாரி இயக்கத்தின் முதுபெருந்தலைவரும், மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்ஜீ மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

தனது மாநிலத்துக்கும் நாட்டுக்கும் அவர் காட்டிய மாறாத அர்ப்பணிப்பும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும்.

ஓர் உறுதியான மார்க்சியவாதியாக, சமத்துவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கவும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காகவும் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கவும் தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.

அவரது தலைமைத்துவமும், மக்கள் மீதான உறுதிப்பாடும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் இவ்வேளையில் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

ன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.