மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி  தலைவர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி நீடிப்பதால் வீடு, வாகன கடன்களின் வட்டி உயரும் வாய்ப்பு இல்லை. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் 3 நாள்கள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து  ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது,

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து 9-ஆவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் வட்டி இந்த விகிதத்தை 0.25 சதவீதம் உயா்த்தி 6.50 சதவீதமாக ஆா்பிஐ நிா்ணயித்தது. அதன்பிறகு  தொடர்ந்து 9வது முறையாக தற்போது   நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தை அதே நிலையில் தொடா்வது என்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வழங்கப்படும் வட்டியும் அதிகரிக்கப்படாது.

 “உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் உள்ளன. விநியோகத்தில், தென்மேற்கு பருவமழையின் நிலையான முன்னேற்றம், அதிக திரட்சியான கரீப் விதைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களின் அளவை மேம்படுத்துதல் ஆகியவை காரீஃப் விளைச்சலுக்கு மிகவும் நல்லது..உள்நாட்டு தேவையை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இது நல்ல அறிகுறி.

கடந்த  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.8 சதவீதமாக நிலையாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கூறிய சக்திகாந்த தாஸ்,   “2024-25 ஆம் ஆண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆகவும், Q1 இல் 7.1% ஆகவும், Q2 இல் 7.2% ஆகவும், Q3 இல் 7.3% ஆகவும், Q4 இல் 7.2% ஆகவும் இருக்கும். 2025-26 ஆம் ஆண்டின் Q1 இல் உண்மையான GDP வளர்ச்சி. 7.2% என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.