சென்னை

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னை கோட்டத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி

  • ஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  • ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
  • ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் இயக்கப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
  • ஆகஸ்ட் 14 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.