சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவபடிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்களது கட்ஆஃப் மார்க்  குறித்து இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், , 15 பேர் 200-க்கு 200 என முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண்களை adm.tanuvas.ac.in tanuvas.ac.in மூலம் தெரிந்து கொள்ளலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களின் தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in/tnUgadmission/Dashboard/frmIndex.aspx?v20250608என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tanuvas.ac.in/ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

முன்னதாக,  2024-25 கல்விஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கான  மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன்3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி கடந்த 28-ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிவிஎஸ்சி – ஏஹெச் படிப்புக்கு 14,497 பேர், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேர் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, தவறு செய்திருந்தால், அதற்கான திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்ட சான்றிதழை இணைக்கவும் ஜூலை 3 முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, ஜூலை இறுதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று (ஆகஸ்டு 7ந்தேதி) தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் – பராமரிப்பு படிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு – பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் உணவுதொழில்நுட்பம் (பி.டெக்), பால்வளதொழில்நுட்பம் (பி.டெக்) மற்றும்ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி – மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்பம் (பி.டெக்) ஆகிய பட்டப்படிப்புகள் உள்ளன. இவை 4 ஆண்டுகால படிப்பாகும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.