சென்னை: கருணாநிதியின்  6வது நினைவு தின அமைதிப் பேரணியைத் தொடர்ந்து  மெரினாவில் அமைந்துள்ள  கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆவது நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. இறுதியில் கருணாநிதி  நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணாசாலை  ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.   அதனை தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

. இதில் திமுக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள்  கலந்துகொண்டு  பேரணியாக சென்றனர். இறுதியில்,  மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.