சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,   திருச்சி காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கலைஞர் சிலையை சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். திருச்சி காட்டூரில் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.