சென்னை

சென்னை தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஜி எஸ் டி சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக மின்சார ரயில் சேவை உள்ளது. மக்கள் கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் ஆகும்.

கடந்த 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம்தேதி வரை,  தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுள்ளன

இவ்வாறு ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பயணிகல் வசதிக்காக கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் 55 மின்சார ரெயில் சேவை ரத்து காரணமாக, தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.