“தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு தடையாய் இருப்பவர்களை அரசியல் களத்தில் பார்த்துக் கொள்வோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

லயோலா கல்லூரியின் நூற்றாண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

“நூறாண்டுகளுக்கு முன்பாக கல்வி அனைவருக்கும் கிடைக்கவில்லை – கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கவில்லை.

ஆனால், இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இப்போது இருக்கிறது

தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.வரும் காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கல்விக்கான தடைகள், முக்கியத்துவம் குறைப்பதற்கான பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளது.

அதனை நாங்கள் அரசியல் களத்தில் பார்த்து கொள்வோம்; மாணவர்கள் நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.