சென்னை: பராமரிப்பு பணி காரணமாக  சென்னை சென்ட்ரல்- ஆவடி இடையிலான மின்சார ரெயில்களின் சில சேவைகள் இன்று இரவு மற்றும்  நாளை  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிம்டடுள்ளது.

ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரல், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11.40, 11.50 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை சென்ட்ரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயிலும், ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையிலான மின்சார ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து நாளை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில் ஆவடி, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.