நீலகிரி

னமழை காரணமாக நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த 2 வார காலமாக தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் குன்னூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

எனவே இங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது.  இங்கு கனமழை இன்றும் பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று  ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.