சென்னை: 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ஜூலை 27-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.