டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து (யுஜிசி) பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்கு பெயர் போனது  சேலம் பெரியார் பல்கலைக்கழககம். அங்குள்ள துணைவேந்தர் மீதான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பெரியார் பல்கலைக்கழக  தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28 துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த கல்வி ஆண்டுகளில் கலந்தாய்வு இல்லாமல், அந்தந்த துறைகள் மூலமாக நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நடப்பாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,  முதுநிலை பாடத்தில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, சமூகவியல், இதழியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், உயிர் வேதியியல், உயிர் புள்ளியியல், ஆற்றல் அறிவியல், கல்வியியல், உயிர் மருத்துவ அறிவியல், ஆற்றல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை செய்யப்படுகிறது. அ

தன்படி, கடந்த 19ம் தேதி பொது கலந்தாய்வு பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக படிப்புகள் நடத்த 2 ஆண்டுகள் தடைவிதித்து பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. 2024- 2025 மற்றும் 2025- 2026 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.