சென்னை

செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி  சென்னை நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார் தன்னை.இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனுவை சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில் பாலாஜியை 22-ந் தேதி(இன்று) நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று அந்த மனு விசாரணைக்கு வருகிறது.

அந்த மனுவில், செந்தில் பாலாஜி,

”அமலாக்கத்துறை வழக்கில் இருந்து என்னை விடுவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனு மீது ஐகோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்”

எனக் கோரி உள்ளார்.