சென்னை

மிழக பத்திரப்பதிவுத் துறை ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

பொதுவாக  சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். எனவே அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

நேற்ற் முன்தினம் ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் ஒரே நாளில், பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.224.26 கோடி கிடைத்துள்ளதாகத் தமிழஅ பத்திரப்பதிவுத்துறை தகவல். அன்று ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.