சென்னை: கலைஞரை இகழ்பவர்கள் ஞான சூனியங்கள், அவர்கள் “ஈனப் பிச்சைக்காக கலைஞரை இகழ்கின்றனர் என சிறுபான்மை நலத்துறை தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக விமர்சித்து உள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை முருகன்,  கள்ளத்தனம் செய்த கிராதகன் கருணாநிதி ! சதிகாரன் கருனாநிதி ! சன்டாலன் கருணாநிதி ! என்ற பாட்டை பாடி விமர்சனம் செய்திருந்தார். இதற்காக அவரை காவல்துறை கைது செய்தது. ஆனால், நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தின்போது, அதிமுக சார்பில், திமுக பாடகர் மறைந்த  நாகூர் அனிபா குரலில்  வெளியிடப்பட்டு, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடல் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் எதிராலித்த நிலையில், இந்த பாடல்  மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விவாதப்பொருளாகவும் மாறி உள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  ஈனப் பிச்சைக்காக கலைஞரை இகழும் ஞான சூனியங்கள் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.

இது குறித்து  அவர்  எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதில், “தலைவர் கலைஞர் தான் வாழ்ந்த காலத்து சீர்கேடுகளையும், மூடப்பழக்கங்களையும்,சமூக அநீதிகளையும் அழித்தொழித்த ஒரு யுக புருஷர்..

அவரை வாழ்த்தியவர்களும் உண்டு!தூற்றியவர்களும் உண்டு! ஆனால் யாராலும்,எக்காலத்திலும் தவிர்க்கப்படமுடியாதவர்.. இந்திய நாட்டின்,தமிழகத்தின் இரண்டு நூற்றாண்டு வரலாற்றின் ஒவ்வொரு பெரும் திருப்பத்திலும் அவர் தன் கால் தடம் பதித்தவர்..

அவரது வார்த்தைகளில் சொன்னால் “தன் மீது எறியப்பட்ட மலத்தையும், சாணத்தையும், காரி உமிழப்பட்ட எச்சிலையும், இழிந்ததுகள் தன்மேல் கழித்த சிறுநீரையும் தன் காலால் உண்டு, உடலால் செரித்து , உள்ளத்தில் வாங்கி ,உணர்வால் ஓங்கி வளர்ந்தவர்..

உயரப்பறக்கும் கழுகின் கழுத்தில் அமரும் கரிச்சான் குஞ்சை கழுகு என்றுமே காயப்படுத்தியதில்லை. கழுகு பறக்கும் காற்றின் வேகமே அதன் உயிர் குடிக்கும்..

மனநிலை திரிந்த ஞான சூனியங்கள் கலைஞரை இகழ்ந்து இனப்பகைவர்கள் தரும் ஈனப்பிச்சைக்காக விழுந்துகிடக்கின்றன!

கடல் உள்ள வரை, தமிழ் மண் உள்ளவரை கலைஞரின் புகழ் வாழும்” எனக் கூறி மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வின் ஐ.டி. விங் ஐ.டியை டேக் செய்துள்ளார்.

கலைஞர் பற்றிய அவதூறு பாடல் – சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடு! பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த டாக்டர் கிருஷ்ணசாமி