சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில்,  திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா   18 057 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  வாக்கு எண்ணிக்கையானது  இன்று (ஜுலை 13ந்தேதி) நடை பெற்று வருகிறது.

முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.   வாக்கு எண்ணிக்கையானது, மொத்தம் 20 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது.

இதுவரை  மூன்ற சுற்றுக்கள் எண்ணப்பட்டு உள்ளது.  ஒவ்வொரு சுற்றின் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்  ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  ஒரு சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது . வாக்கு எண்ணிக்கை தொடங்கி 2 மணிநேரம் ஆகியும் 3 சுற்றுகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.

இதுவரை, அதாவது காலை 10.30 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா   18 057 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அவரைத் தொடர்ந்து   பா.ம.க 7,323 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி  1,120 வாக்குகள் பெற்று  உள்ளனர்.

விக்கிவாண்டி தொகுதியில், , திமுக சார்பில்  அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களம் கண்டனர்.  இங்கு  82.48 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது