ரோடு

மிழக அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் மதுக்க்டைகளை குறைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோட்டில் தமிழக அமைசசர் முத்துசாமி செய்தியாளர்களிடம்

”விக்கிரவாண்டியில் அண்டை மாநிலத்தில் இருந்து சாராயத்தை வாங்கி குடித்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்த முடியாது. அனைவருக்கும் இது நன்றாக தெரிந்ததுதான். காவல்துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.

இதுவரை 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. மேலும் 1,000 கடைகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

உடனடியாக டாஸ்மாக் கடைகளை குறைக்க முடியாது. அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக உள்ளது.

தமிழக அரசு மதுப்பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும். தற்போதைக்கு கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது”.

என்று தெரிவித்துள்ளார்.