சென்னை

கொலை செய்யப்பட்டஆம்ஸ்டிராக்குக்கு சென்னை பெரம்பூரில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார்  அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் புதைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஆனால் நீதிபதி ஆம்ஸ்டிராங்க் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் புதைக்க அனுமதி அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நீதிபதி அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர் ஆனந்த் செய்தியாளர்களிடம்,

“பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அருகே சுமார் 7 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. அங்கு பல அடுக்குகளை கொண்ட அடுக்குமாடி வீடுகளே கட்டலாம்.

அங்கு ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்டப்படும். அவர் சமுதாயத்திற்காக செய்த அரும் பணிகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையாக அவை இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்”

என்று தெரிவித்துள்ளார்.