கேனக்கல்

ர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல்லுகு காவிரி நீர் வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருவதால்  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து ஆங்காங்கே சிறு சிறு குட்டைகள் போல நீர் தேங்க் இருந்தது

தற்போது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 அடியாக அதிகரித்துள்ளது.

இங்கு நேற்று மாலை 3000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.