திருச்சி

மிழக முதல்வர் வருகையையொட்டி இன்று திருச்சியில் டிரோன்கள் பர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். எனவே இன்று மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்து இங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். எனவே இன்ரு முழ்வதும் பாதுகாப்பு காரணம் கருதி இன்று முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.