ராமேஸ்வரம்

லங்கை கடற்படை 18 தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை எல்லைக்குள் சென்று மீன்ன் பிடித்ததாக இதற்கு காரணம் சொல்லப்படுகிறது.  மத்திய மாநில முயற்சிகளால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்

நேற்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்த 18 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

நேற்று கைது செய்யப்பட்ட 18 பேரும் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்கள் ஆவர். தமிழக மீனவரள் தாக்க்ளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.