ள்ளக்குறிச்சி

ள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உர்யிரிழந்தோருக்கு ரு. 10 லட்சம் நிதி அளிப்பதை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விமர்சித்துள்ளார்

தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன., கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த, விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் கூறினார்.

பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம்,

”முன்பு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று தி.மு.க. பேசியது என்ன ஆனது? 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை முதல்வர் வந்து பார்க்கவில்லை. டாஸ்மாக், கஞ்சா அதிகம் இருக்கும் நிலையில் தற்போது கள்ளச்சாராயமும் இருப்பது வேதனை.

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி கொடுப்பது தவறானது. நிதி கொடுப்பது விஷ சாராயம் அருந்துபவர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது. விஷ சாராயத்தை ஒழிக்க வேண்டுமே தவிர அதை அருந்தியவர்களுக்கு நிதி தரக்கூடாது. சாராய வியாபாரிகளுடன் அரசு கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறது.

அதிகாரிகளை மாற்றுவதால் தீர்வு கிடைத்து விடாது. இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. தமிழகத்தில் வெறும் தேர்தல் அரசியல் மட்டும் தான் நடக்கிறது. அடுத்த தேர்தலை நோக்கி செயல்படும் அரசியல் கட்சிகள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை.”

என்று கூறினார்.