சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில்,

“தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேவடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால்

18.06.2024 – 19.06.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.06.2024 – 21.06.0024 தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், புதுவை மற்றும் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.06.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை . திருப்பூர். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.

23.08.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.06.2024, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னதுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.