ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் ஒரு படைகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.  இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் கடந்த 14ந்தேதி முடிவடைந்து 15ந்தேததி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில், நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  விசாரணைக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்பை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது.  இதற்கு மத்திய மாநில அரசுகள் முறையான தீர்வு காணாத நிலையில், மீன் பிடிதடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற  மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை  4 மீனவர்களையும், அவர்களது படகையும்  பறிமுதல் சய்துள்ளனர். கைது  செய்யப்பட்ட 4 மீனவர்களும்  இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.  இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.