சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு பெற்றுள்ள நிலையில்,  ஜூலை 10ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.  தேர்வு முடிவுகள் மே 6ந்தேதி வெளியிடப்பட்டது. அன்றையே தினமே பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப  பதிவும் தொடங்கியது.

அதன்படி, மே 6ந்தேதி முதல் ஜூன் 6ந்தேதி வரை விண்ணப்பதிவு நடைபெற்று வந்தது.  அதன்படி www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவுகள் நடைபெற்று வந்தது. இந்த விண்ணப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து,  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும், விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த ஆண்டை போலவே மாநிலம் முழுவதும் 110 சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விண்ணப்ப பதிவு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால் காலை 8 முதல் 6 மணி வரை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள அழைப்பு மையத்திற்கு, 1800-452-0110 என்ற எண்ணுக்கு போன் செய்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு tneacare@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பலாம். சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்துள்ளது. பி.இ, பி.டெக் படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாள் மாலை 6 மணி நிலவரப்படி 20,097 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இவர்களில் 5,812 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தையும், 1519 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

இதைய்டுத்து, ஜூன் 12-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13-ம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.