சென்னை: காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.

நடைபெற்ற முடிந்த 18வது மக்களக்கான தேர்தலில் திமுக காங்கிரஸ் இணைந்த இண்டியாக கூட்டணி 39 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில்  தேர்தல் நடைபெற்ற   39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிட்ட நிலையில், திமுக தலைமையில் போட்டியிட்ட அனைவரும் அமோக வெற்றி பெற்றனர்.  திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி  9 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை மக்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்தார். மேலும், கட்சியின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், ஊடகத்துறையினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்தவர்,.   தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்று நடத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றி தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், நாட்டு மக்கள் மோடிக்கு சரியான பாடத்தை புகட்டியுள்ளது என்றும், பாஜக வாங்கி வங்கி சரிந்துள்ளதாகவும், இண்டியா கூட்டணி வாங்கு வங்கி அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

முழு பேட்டியை  கீழே லிங்கில் காணலாம்…