சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவடங்களில் லேசான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது

கடந்த 30 ஆம் தேதி கேரளாவில் நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென் மேற்கு பருவமழை, கேரளாவில் தொடங்கியது. இதனால் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேஉம் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது.

தற்போது தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதாவது ஈரோடு, சேலம், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.