சென்னை:  18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், அவர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் மற்றும், அவர்கள் ஓட்டி வந்த வாகனப்பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கும் சிறை தண்டனை வழங்கப்படும்  என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல்   (ஜூன் 1ந்தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், வாகன  விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை புதிய விதியை இன்று  ( ஜூன் 1ந்தேதி)  முதல்  அமல்படுத்தி உள்ளது.

அதன்படி 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி ஏற்கனவே இருந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதுடன்,   ஆர்சி ரத்து மற்றும் ரூ.25,000 அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.