சிவகங்கை

மிழகத்தில் சிவகங்கை அருகே ஒரு ரேஷன் கடையி ரேஷன் அட்டைகளுக்க் 50 மில்லி மண்ணெண்ணெய் வழஙகப்பட்டதால் மக்கல் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தமிழகத்தில் சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியில் அமைந்துள்ள ரேஷன்கடை மூலம் கொல்லங்குடி, சாத்தப்புலி, அரியாக்குறிச்சி, அழகர்சாமி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 950 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கப்படும் மண்எண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கொல்லங்குடி ரேஷன்கடைக்கு இந்த மாதம் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதனை 950 ரேஷன்கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு கார்டுக்கும் 50 மில்லி அளவு மட்டுமே வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த 50 மில்லிக்கு தலா ரூ.2 வீதம் வசூலிக்கப்பட்டது. ரேஷன்கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொல்லங்குடி கிராம மக்கள் இது குறித்து,

“கடந்த காலங்களில் ஒரு கார்டுக்கு 3 லிட்டர் வீதம் மண்எண்ணெய் வழங்கினர். அது படிப்படியாக 2 லிட்டர், ஒரு லிட்டர், அரை லிட்டராக குறைந்தது. பின்னர் 200 மில்லி வழங்கினர். தற்போது 50 மில்லி மட்டுமே தருகின்றனர். இதை வைத்து நாங்கள் என்ன செய்ய முடியும்”

என்று தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு அதிகாரிகள்,

“சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்திருப்போருக்கு மண்எண்ணெய் கிடையாது என்றாலும் அவர்களும் வாங்குகின்றனர். மத்திய அரசு வீடுகளுக்கு  எரிவாயு சிலிண்டர் இணைப்பை கணக்கிட்டு மண்எண்ணெய் ஒதுக்கீட்டை குறைந்துவிட்டது. எனவே இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது,”

என்று விளக்கம் .அளித்துள்ளனர்.