சென்னை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி என விமர்சித்துள்ளார்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.கார்த்திகேயனை ஆதரித்து சிந்தாதிரிப்பேட்டையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்..

சீமான் தனது உரையில்,

”தேர்தல் ஆணையமே ஒரு பெரிய நாடக கம்பெனி தான். அப்பாவி மக்களிடம் பணத்தைப் பிடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதில்லை.

தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும். எனக்கு விழும் வாக்கைத் தாமரைக்கு விழுவது போல் மாற்றி அமைக்கத் தொழில்நுட்பத்தால் முடியும்.

உலக நாடுகள் பலவற்றில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை கைவிட்டு விட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச் சீட்டுதான் நடைமுறையில் உள்ளது.”

என்று கூறினார்.