சென்னை

ன்று முதல் கடற்கரை தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13 ஆம்தேதி (இன்று) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல்  23 ஆம் தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40149) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40150) இன்று முதல் 16 ஆம் தேதி வரையிலும், 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40419) 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40420) 17 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.” 

என அறிவிக்கப்பட்டுள்ளது.

From today, Beach – Tambaram, midnight electric train, cancelled,