தூத்துக்குடி

ன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாமல் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

தற்போது மழை நின்றும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்னும் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடியாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆயினும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்குச் சூழ்நிலைக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.