சென்னை

செம்பரப்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகக் கன மழை பெய்தது. இந்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

தற்போது இந்த பகுதியில் மழை நின்றதைத் தொடர்ந்து நீர் திறப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.  எனவே சிறிது சிறிதாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீர் அலவு குறைக்கப்பட்டு நேற்று வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த ஏரியின் நீர்மட்டம் 22.64 அடியாக உள்ளது.